IMG 9664
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு சிறுமியின் மரணம்: சுகாதார அமைச்சு தீவிர விசாரணை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த உறுதி!

Share

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் குறித்து, சுகாதார அமைச்சு உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (09) நாடாளுமன்ற அமர்வின் போது, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்:

கடந்த டிசம்பர் மாதம் ஒவ்வாமை (Allergy) காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, டிசம்பர் 21 ஆம் திகதி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த மரணம் குறித்து வைத்தியசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் தற்போது சுகாதார அமைச்சுக்குக் கிடைத்துள்ளன.

வைத்தியசாலை ஊழியர்களின் கவனக்குறைவு அல்லது அசமந்த போக்கினால் இந்த மரணம் நிகழ்ந்ததா என்பது குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த அமைச்சர், விசாரணை அறிக்கைகளின் முக்கிய விபரங்களை, விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...