images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

Share

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

புரூக்ளின் சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மான்ஹாட்டன் கொண்டு வரப்பட்ட மதுரோ, 92 வயது மூத்த நீதிபதி ஆல்வின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். சிறை உடையில், கைவிலங்கிடப்பட்ட நிலையில் நொண்டியபடி வந்த மதுரோ, அதிகாரிகளுடன் சிரித்துப் பேசியபடி காணப்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவைப் போதைப்பொருள் சந்தையாக மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தற்காப்புக்காக வாதிட வழக்கறிஞர்கள் எவரும் முன்வராத நிலையில், மதுரோ தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மதுரோவின் 10 பில்லியன் டொலர் (சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி) மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.

தனது தந்தையின் கைது குறித்துப் பேசிய மதுரோவின் மகன் குரேரா, கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களுடன் இருந்து கொண்டே சிலர் துரோகம் இழைத்துவிட்டனர். அந்தத் துரோகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். எனது தந்தையைக் கைது செய்த அமெரிக்காவை நாங்கள் கண்டிப்பாகப் பழிதீர்ப்போம்.”

இதற்கிடையில், திங்கட்கிழமை பதவியேற்ற இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் சமரசப் போக்கைக் கையாண்டு வருகிறார். இது மதுரோவின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...