articles2FzixoDT3CyssagQNOiIL2
செய்திகள்இலங்கை

அம்பாறையில் பரபரப்பு: பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு மீட்பு – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

Share

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகாமையில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று இன்று (06) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற தந்தை ஒருவர், வீதியோர வெற்றுக்காணியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அண்மையில் இந்தக் காணியில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதாலும் நிலத்தில் புதைந்திருந்த கைக்குண்டு வெளியே தெரிந்துள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டுத் தயாரிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இப்பகுதியில் நிலவிய மோதல்களின் போது விடுதலைப் புலிகளினால் இது கைவிடப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய சவளக்கடை பொலிஸார் அவ்விடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டு வந்தனர்.

கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீதவான் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, மக்கள் நடமாட்டமில்லாத பாதுகாப்பான இடத்தில் குண்டைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையிலான குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலைக்கு அருகிலேயே குண்டு மீட்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...