1a7053a65891bb57e745b43fa7275c4ed35c5c6d
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிதி: தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற அரசாங்கம் அனுமதி!

Share

‘டிட்வா’ சூறாவளி மற்றும் பேரிடரால் தமது வீடுகள் மற்றும் காணிகளை முழுமையாக இழந்த மக்கள், அவர்கள் விரும்பிய எந்தவொரு மாவட்டத்திலும் குடியேற அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கு வீடமைப்பு மற்றும் காணி கொள்வனவுக்காக ஒரு கோடி ரூபாய் (ரூ. 10,000,000) நிதி அரசாங்கத்தால் வழங்கப்படும்.

பயனாளர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தாமே காணியைத் தெரிவு செய்து கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத் தரவுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் மூலம் கட்டம் கட்டமாக நிதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற வீட்டுத் திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

பேரிடருக்குப் பின்னரான வீடமைப்புப் பணிகளுக்காக மட்டும் குறைநிரப்புப் பிரேரணை மூலம் 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து வீடமைப்புத் திட்டங்களும் எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை மதித்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும் என அமைச்சர் மேலும் உறுதியளித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...