1a7053a65891bb57e745b43fa7275c4ed35c5c6d
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிதி: தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற அரசாங்கம் அனுமதி!

Share

‘டிட்வா’ சூறாவளி மற்றும் பேரிடரால் தமது வீடுகள் மற்றும் காணிகளை முழுமையாக இழந்த மக்கள், அவர்கள் விரும்பிய எந்தவொரு மாவட்டத்திலும் குடியேற அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கு வீடமைப்பு மற்றும் காணி கொள்வனவுக்காக ஒரு கோடி ரூபாய் (ரூ. 10,000,000) நிதி அரசாங்கத்தால் வழங்கப்படும்.

பயனாளர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தாமே காணியைத் தெரிவு செய்து கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத் தரவுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் மூலம் கட்டம் கட்டமாக நிதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற வீட்டுத் திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

பேரிடருக்குப் பின்னரான வீடமைப்புப் பணிகளுக்காக மட்டும் குறைநிரப்புப் பிரேரணை மூலம் 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து வீடமைப்புத் திட்டங்களும் எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை மதித்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும் என அமைச்சர் மேலும் உறுதியளித்துள்ளார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
anil jasinghe
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விரைவில் தேசிய மருத்துவமனையாக தரம் உயர்வு: சுகாதார அமைச்சு அறிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைத் (Jaffna Teaching Hospital) தேசிய மருத்துவமனையாக (National Hospital) தரம் உயர்த்துவதற்குத்...

civil security department 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவில் பாதுகாப்புப் படையில் பாரிய மாற்றம்: 15,000 பேர் பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களுக்கு இணைப்பு!

சிவில் பாதுகாப்புப் படையின் (CSD) வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், சுமார் 15,000 படையினரை ஏனைய அரச...

articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...