images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

Share

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme) அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உஷானி உமங்கா எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளித்த அமைச்சர், ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், அவற்றுக்கு மேலதிகமாகத் தனியானதொரு ஓய்வூதிய முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

“EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் எங்கும் கூறவில்லை. EPF என்பது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புக்கானது. அதனை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, புதிய ஓய்வூதிய முறையை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்தே ஆராய்கிறோம்” என அவர் விளக்கமளித்தார்.

தனியார் துறை ஊழியர்களும் தங்களது ஓய்வுக்காலத்தில் நிலையான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இலங்கையில் அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் அதேவேளை, தனியார் துறை ஊழியர்கள் தங்களது பணிக்கால முடிவில் EPF மற்றும் ETF நிதிகளை மட்டுமே பெற்று வருகின்றனர். நீண்டகாலமாக நிலவி வரும் இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் தற்போது முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...