thisha
செய்திகள்அரசியல்இலங்கை

உடன் தேர்தலுக்குச் செல்லுங்கள்! – எதிர்க்கட்சி அரசிடம் வலியுறுத்து

Share

‘அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து சம்பந்தமாக ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

‘சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்துக்கும் ஐந்தாண்டுகள்தான் மக்கள் ஆணை உள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பினை அரசு உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் ஆட்சிக் காலத்தை நீடிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

அரசினை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது எமது பலத்தையும் காட்டுவோம்’ – என்று தெரிவித்துள்ளார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...