image 847fd5d695
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கினிகத்தேனையில் அதிர்ச்சி: 11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – மூன்று சிறுவர்கள் விளக்கமறியலில்!

Share

கினிகத்தேனை பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், அவரது காதலன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை பிரதான பாடசாலை ஒன்றில் 11-ஆம் வகுப்பில் பயிலும் மாணவி. இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருபவர்.

மாணவி, கோணவல பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். காதலனைச் சந்திக்கச் சென்ற போது, அவர் தனது நண்பரின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதலனும் அவரது நண்பர்களும் இணைந்து மாணவியைப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த 17-ஆம் திகதி காலை வீட்டை விட்டுச் சென்ற மாணவி, இரவு மிகவும் தாமதமாகத் திரும்பியதால் சந்தேகமடைந்த பாட்டி, கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் நடத்திய விசாரணையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

பாதிக்கப்பட்ட மாணவி மேலதிக சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் திங்கட்கிழமை (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் பீட்டர் போல், சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 2, 2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...