125535987 d1afd603 42be 4dc5 92e7 7796b59074e5.jpg
செய்திகள்உலகம்

கட்டாய ராணுவ சேவை அறிமுகம்: அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக உயர இலக்கு!

Share

நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் (Carsten Breuer) எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தனது ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனி அரசாங்கம் கட்டாய ராணுவ சேவை திட்டத்தை (Compulsory Military Service) அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவப் பரிசோதனையை (Medical Test) எடுக்க வேண்டும்.

இந்த ராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும் இருக்கும். பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஜெர்மனி ராணுவத்தில் தற்போது சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய ராணுவ சேவைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...

MediaFile 12
செய்திகள்இலங்கை

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – சவப்பெட்டி ஊர்வலம்!

பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,...

image 2f711dc81d
செய்திகள்உலகம்

ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு: தென்னிந்தியாவில் முதல் மாநிலமாகச் சாதனை!

இந்தியாவில், கர்நாடக மாநில அரசு, மாதவிடாய்க் காலத்தில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்...