FF3GdApX0AYiTCU
செய்திகள்விளையாட்டு

ஜப்னா கிங்ஸை சுழலில் சுருட்டிய காலி கிளாடியேட்டர்ஸ்!!!

Share

நேற்று ஆரம்பமான எல்.பி.எல் போட்டியில் ஜப்னா கிங்ஸை 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

லங்கா பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால போட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் அணித்தலைவர் பாணுக ராஜபக்ச 56 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

165 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக வகாப் றியாஸ் 27 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய, நேற்றைய போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக சமித் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.
#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...