1733556829 sridaran 2
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிதரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: ஆதரவை மீளப்பெறுவதாக கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

Share

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிவஞானம் சிறிதரனின் செயற்பாட்டிற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரியான கேர்ணல் ஓ.ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனை, அரசியலமைப்புப் பேரவையில் அண்மையில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த யோசனை ஐந்துக்கு நான்கு என்ற வாக்கு விகிதத்தில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும், சிறு கட்சிகளின் பிரதிநிதியாகப் பேரவையில் அங்கம் வகிக்கும் சிவஞானம் சிறிதரன், இந்த இராணுவமயமாக்கல் முயற்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாகச் செய்திகள் வெளியாகின.

“சிறிதரனை அரசியலமைப்புப் பேரவைக்குத் தாமே முன்மொழிந்த நிலையில், அவரது இந்தச் செயற்பாடு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

சிறிதரன் தனது தீர்மானத்தை ஏதேனும் ஒரு வழியில் திருத்தியமைக்க வேண்டும் அல்லது இதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தவறும் பட்சத்தில், சிறிதரனுக்குத் தாம் வழங்கிய ஆதரவை உடனடியாக மீளப்பெற நேரிடும் என கஜேந்திரகுமார் எச்சரித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (23) கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...