25 68123cd9dd1b1
செய்திகள்இலங்கை

எரிபொருள் இருப்பு உறுதி; ஜனவரி விலை திருத்தம் குறித்து இன்னும் முடிவில்லை – கனியவளக் கூட்டுத்தாபனம்!

Share

தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இது குறித்துத் தெரிவிக்கையில் நாட்டின் களஞ்சிய வசதிக்கு ஏற்ப, அடுத்த 20 முதல் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் எரிபொருள் இருப்புகளுக்கோ அல்லது விநியோகத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அது குறித்து இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகச் சந்தை நிலவரம் மற்றும் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் விலை திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

எரிபொருள் இறக்குமதிகள் முறையான திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கப்படுவதால், நுகர்வோர் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...