ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் – என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் எமக்கு நன்மை பயக்கவில்லை. மொட்டு கட்சியால்தான் சுதந்திரக்கட்சி பயன் அடைந்தது. எம்முடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால்தான் 14 ஆசனங்கள் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்றது. அவ்வாறு இல்லாவிட்டால் ஒருவர்கூட வெற்றிபெற்றிருக்க முடியாது.
சுதந்திரக்கட்சி தனக்கான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே, இருக்கமுடியாவிட்டால், விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்காது, வெளியேற வேண்டும்.” – என்றார்.
Leave a comment