1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், இவ்வாறான மோசடிக்காரர்கள் குறித்து மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் சில தனி நபர்கள் இவ்வாறு மோசடியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இந்த மோசடிக்காரர்கள் ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் சென்று சுமார் 2,000 ரூபாய் வசூலிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில், சில தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையை இந்தப் மோசடிக்காரர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிய வருகிறது.

எனினும், பல வர்த்தக நிலையங்கள் குறித்த நபருக்குப் பணம் வழங்கவில்லை என அறியமுடிகிறது. அனர்த்த நிவாரண நிதியுதவி வழங்கும் போது, உரிய அதிகாரபூர்வ நிறுவனங்களை மட்டுமே அணுகுமாறும், தனி நபர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...