1768145880 unnamed
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சி மின்சார சபை விடுதியில் புதையல் வேட்டை: 4 ஊழியர்கள் அதிரடிப்படையினரால் கைது!

Share

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் சுற்றுலா விடுதி வளாகத்தில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மின்சார சபை ஊழியர்கள் நால்வர் விசேட அதிரடிப்படையினரால் (STF) ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி டி.ஆர்.எல். அதுக்கோரல தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நால்வரும் அனுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய நவீன உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உரிய அனுமதியின்றி அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டமை.தாம் தங்கியிருந்த மின்சார சபையின் சுற்றுலா விடுதியைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிரடிப்படையினர், அவர்களைக் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மின்சார சபை ஊழியர்களே இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...