முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்னைக்குப் பயணம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டார்!

294916 untitled design 10

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.

இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 மூலம் அவர் சென்னை நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.

அவர்களது தனிப்பட்ட விஜயமா அல்லது உத்தியோகபூர்வ விஜயமா என்பது குறித்த மேலதிகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Exit mobile version