Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: துப்பாக்கி விவகார வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Share

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கம்பஹா நீதிமன்றம் இன்று (09) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

அந்தத் துப்பாக்கி, கடந்த 2001-ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, வழக்கை ஆராய்ந்த நீதிபதி அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். எனினும், வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...