Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: துப்பாக்கி விவகார வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Share

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கம்பஹா நீதிமன்றம் இன்று (09) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

அந்தத் துப்பாக்கி, கடந்த 2001-ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, வழக்கை ஆராய்ந்த நீதிபதி அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். எனினும், வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...