Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: துப்பாக்கி விவகார வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Share

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கம்பஹா நீதிமன்றம் இன்று (09) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

அந்தத் துப்பாக்கி, கடந்த 2001-ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, வழக்கை ஆராய்ந்த நீதிபதி அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். எனினும், வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....