images 2 2
செய்திகள்இலங்கை

போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

Share

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று (அக்டோபர் 23) கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளார்.

செனகல் நாட்டைச் சேர்ந்த 35 வயதான சந்தேகநபர் இன்று காலை 05.45 மணிக்கு இலங்கை எயார்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்டு, அவரை எல்லை கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்பச் சோதனைகளில், அவர் சமர்ப்பித்த பிரேசிலியக் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது பொதிகளை ஆய்வு செய்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான செனகல் கடவுச்சீட்டையும் மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கமைய, அவர் வந்த வழியே கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக இலங்கை விமான நிறுவன அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...