வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (08) நடத்திய ஊடக சந்திப்பில், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வட மாகாணங்களில் தீவிர மழை பெய்தால், அப்பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
தற்போது பெரும்பாலான குளங்களில் நீர் கொள்ளளவு 80% முதல் 90% வரை காணப்படுகிறது. 73 பிரதான குளங்களில் 25 குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்து வருகின்றன.
மேலதிக மழைநீரை உள்வாங்கும் வகையில் நேற்று மற்றும் இன்று பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு, இடவசதி பேணப்பட்டு வருகின்றது.
மகாவலி நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த தனபால, லொக்கலஓயா, ஹேபொல, மாதுருஓயா, கந்தலாயம, கலாஓயா மற்றும் களுகங்கை ஆகிய 6 மகாவலி நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்கின்றன.
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் சராசரியாக 95% நீர் காணப்படுகிறது. எனினும், கொத்மலை நீர்த்தேக்கம் மாத்திரம் இன்னும் 59% கொள்ளளவிலேயே உள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் ஆறுகளுக்கு அண்மித்த பகுதிகளில் வசிப்போர், நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.