சிலியில் நிலவிய கடுமையான பனிப்புயலில் சிக்கி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 05 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோரிஸ் டெல் பெய்ன் தேசிய பூங்காவில் இருந்து நேற்று (நவம்பர் 18) குறித்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ஃபோன்ட் (Gabriel Boric Font) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்காகச் சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் கலந்துரையாடி வருவதாக சிலி அரசாங்கம் அறிவித்துள்ளது.