MediaFile 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் அவர்கள் அனைவரையும் செல்ல நீதவான் அனுமதித்தார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தையிட்டி பகுதியில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்பு மற்றும் ஏனைய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழலிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...