செய்திகள்

பண்டிகைக் கால ஆரம்பம் : உச்சம் தொட்ட மீன்களின் விலை!

Share
20 20
Share

பண்டிகைக் கால ஆரம்பம் : உச்சம் தொட்ட மீன்களின் விலை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீனின் சில்லறை விலை 2,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,280 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பலயா மீன் 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சாலை மீன் 560 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் மத்தி 1,020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, பேலியகொடை மத்திய மீன் சந்தையின் மொத்த விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல 1,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் 1,900 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா 450 ரூபாவாகவும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...