இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை விடுத்து போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்த இலங்கையர்கள் முயற்சிப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் அன்வர் ,தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன.
மேலும் தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி.
தடுப்பூசி போடுவது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
#SrilankaNews

