25 68af34b161e7d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவ்வந்தி உடை அணிந்து வழக்காடிய போலி சட்டத்தரணி கைது – பல இலட்சம் ரூபாய் மோசடி அம்பலம்!

Share

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி பாணியில் ஆடை அணிந்து உள்நுழைந்து, வழக்காடித் தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாயை மோசடி செய்ததுடன், சில உண்மையான சட்டத்தரணிகளையும் ஏமாற்றி வந்த போலி சட்டத்தரணி ஒருவரைக் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 8) ஒந்தாச்சிமடத்தில் வைத்துப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு பெண்ணின் வீட்டில் திருடுபோன தங்க நகைகளை நீதிமன்றத்திலிருந்து மீட்டுத் தருவது தொடர்பாகத் தேடியபோது, அந்தப் பெண் ஒருவரின் சிபாரிசின் பேரில் இந்தப் போலி சட்டத்தரணியைத் தொடர்புகொண்டார்.

நகைகளை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் பணம் வழங்க வேண்டும் எனக் கூறி, வழக்குத் தொகையாக 2 இலட்சம் ரூபாய் கோரியதில், குறித்த பெண் முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

இந்த நபர், மட்டக்களப்பில் உள்ள ஒரு சட்டத்தரணியைத் தொடர்பு கொண்டு, தன்னைக் கொழும்பு உயர் நீதிமன்றச் சட்டத்தரணி என அறிமுகப்படுத்தியுள்ளார். தனக்குக் கல்முனை, திருகோணமலை போன்ற மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பதால், தனது வாடிக்கையாளரின் (மோசடி செய்யப்பட்ட பெண்) வழக்கை எடுத்து நடத்துமாறு கோரியுள்ளார். இதன் மூலம் பல சட்டத்தரணிகளையும் இவர் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களை மோசடி: இவ்வாறு பல வாடிக்கையாளர்களைப் பல சட்டத்தரணிகளிடம் அனுப்பி வைத்து, அவர்களிடமிருந்து தனது சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் என அறிமுகப்படுத்தி வழக்குத் தொகையாகப் பல இலட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) வழக்கு விசாரணைக்குச் சென்றபோது, ஏற்கனவே ஆஜரான சட்டத்தரணிக்கு இந்தப் போலி சட்டத்தரணி தொடர்பாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று சட்டத்தரணியா என உறுதிப்படுத்தக் கோரியபோது, அவர் அங்கிருந்துத் தனது வாகனத்துடன் தப்பி ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுப் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. சனிக்கிழமை இரவு ஒந்தாச்சிமடத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் போலி சட்டத்தரணியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

போலி வருகை அட்டை, ரப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்புக் கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளைக் கொண்ட 16 பையில்கள் ஆகியவை அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இன்று (நவம்பர் 11) நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாளம் காணும் அணிவகுப்பில், அவர் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்புப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...