01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

Share

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி காரணமாக, இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், இந்தப் போர்ச் சூழல் விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளதால் விலையேற்றம் முன்கூட்டியே ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் மற்றும் காப்புறுதிச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சந்தையில் வேகமாக உயர்ந்து வருகின்றன. தம்புள்ளை மற்றும் பேட்டை போன்ற பிரதான மொத்த விற்பனைச் சந்தைகளில், முன்னர் 230 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பருப்பு, தற்போது 310 முதல் 315 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சில சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பருப்பு 350 முதல் 360 ரூபாய் வரையான உச்ச விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறையிட்டுள்ளனர்.

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பும், போக்குவரத்துச் செலவுகளும் இந்தப் பொருட்களின் இறுதி விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பருப்பு மாத்திரமன்றி, ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி போன்ற பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் ஏனைய சமையல் எண்ணெய் வகைகளின் விலைகளும் 10% முதல் 15% வரை அதிகரித்துள்ளன. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றிப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...