e8c8525a 174a 4fae a7ca 29dd06092afe
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 95 மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு: உணர்வுபூர்வமாக நடைபெற்ற மதிப்பளிப்பு நிகழ்வு!

Share

மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை ஒன்றிணைத்து அவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மன்னார் இரணைஇலுப்பை குளம், முள்ளிக்குளம், பண்டிவிருச்சான் பிரதேசங்களைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் இந்த நிகழ்வின்போது கெளரவிக்கப்பட்டனர்.

மாவீரர்களின் உறவுகளுடன் 150க்கும் மேற்பட்டோர் பங்குபற்றலுடன் இந்த மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அருட்தந்தையர்கள், முன்னைநாள் போராளிகள், மாவீரர் பெற்றோர்கள் மற்றும் மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

குறித்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்குக் கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன், கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...