23305205 elan 648
செய்திகள்உலகம்

உலகின் முதல் 600 பில்லியன் டொலர் அதிபதி: எலான் மஸ்க் புதிய வரலாற்று சாதனை!

Share

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

மஸ்க் இந்த மைல்கல்லை எட்ட அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் அசுர வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 800 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டு, அதன் பங்குகள் அதிக விலைக்குப் பட்டியலிடப்பட்டதால் இவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

புதன்கிழமை (17) நிலவரப்படி, எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

எலான் மஸ்க் தற்போது உலகின் பெரும் பணக்காரராக இருப்பதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்து வருகிறார். முன்னதாக அவர் அமெரிக்காவின் திறன் மதிப்பீட்டுத் துறையின் (DOGE) தலைவராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 500 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்ற மஸ்க், இரண்டே மாதங்களில் அடுத்த மைல்கல்லை எட்டியிருப்பது உலகப் பொருளாதார நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...