23 64daf2fac3aa8
செய்திகள்இலங்கை

இலங்கையில் வரட்சியான வானிலை நீடிக்கும்: அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவும் என எச்சரிக்கை!

Share

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை தொடரும் அதேவேளை, அதிகாலை வேளைகளில் பல மாகாணங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற, வரட்சியான வானிலையே நிலவும். அதிகாலை மற்றும் காலை வேளைகளில் கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் தற்காலிகமாகப் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி,மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் & காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது

அதிகாலை வேளைகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாகத் தரைவழிப் போக்குவரத்துகளில் வீதிப் புலப்பாட்டுத் தன்மை (Visibility) குறைய வாய்ப்புள்ளது. எனவே, வாகனச் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக மலைப்பாங்கான வீதிகளில் பயணிப்போர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...