தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (நவம்பர் 7) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அவர் காலமானபோது அவருக்கு வயது 67 ஆகும்.
அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (நவம்பர் 8) பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன ரெஸ்பெக்ட் ஹோமில் (Jayaratne Respect Home) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் திருவுடல் நாளை (நவ 9) மாலை 6:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.