Death Penalty in america
செய்திகள்உலகம்

2022ல் முதல் மரண தண்டனை யாருக்கு நிறைவேற்றப்பட்டது தெரியுமா?

Share

2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன் மற்றொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார் .விசாரணையின்போது ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததால் இரண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது.

பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம்செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஓக்லஹோமா மாகாணமும் ஒன்று கடந்த 2015ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டது.

அந்தத் தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு 3 விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருபத்தி மூன்று மாநிலங்களில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...