காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறைச்சாலை அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் நிலம் மிக அதிக வணிக மதிப்பைக் கொண்டுள்ளது. இந்த நிலத்தை காலி நகரத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், சிறையில் உள்ள கைதிகளை நீதிமன்றத்திற்குச் நேரடியாக அழைத்துச் செல்வதை நிறுத்திவிடுவார்கள். இனி வழக்கு விசாரணைகள் டிஜிட்டல் முறையில் (Digital Hearings) செய்யப்படும்.
எனவே, சிறைச்சாலை சற்று தொலைவில் அமைவதால் பெரிய பிரச்சனை இல்லை என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றத்தின் மூலம் காலி நகரின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

