Arun Hemachandra 1200px 25 06 16 1000x600 1
செய்திகள்அரசியல்

வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஐரோப்பிய ஒன்றிய – இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் பங்கேற்கப் பெல்ஜியம் பயணம்!

Share

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய – இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் (EU-Indo-Pacific Ministerial Forum) கலந்துகொள்வதற்காக வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று புதன்கிழமை (நவம்பர் 19) பெல்ஜியம் செல்லவுள்ளார்.

பிரதி அமைச்சர் இன்று முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியம்-இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் உயர்மட்ட அமர்வுகளில் பிரதி அமைச்சர் பங்கேற்பார்.

பரஸ்பர ஒத்துழைப்புள்ள முக்கிய துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணம், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதுடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த முக்கியக் கலந்துரையாடல்களில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும் அமையும்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...