மீன்பிடி நடவடிக்கைகள் அதிரடியாகத் தடை – வானிலை மையம் எச்சரிக்கை!

Fishermen

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் அட்சரேகை 4.9°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.4°கி அருகே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தீவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் நாளை (8) முதல் தீவில், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை தவிர்க்கப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம்அறிவுறுத்துகிறது.

தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. நாளை (8) முதல் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

 

 

Exit mobile version