ஜனநாயகம் வீழ்ந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு நாள் மெய்நிகர் தளத்தில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் முதல் நாள் உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகத் தலைவர்கள் 100 பேருக்கு அதிகமானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயகம் தன்னிச்சையாக செயற்படும் சர்வாதிகாரிகளால் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு வருவதாக அவர் எச்சரித்தார்.
#WorldNews
Leave a comment