25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

Share

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இன்று (அக்டோபர் 24, 2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

“தன்னைக் கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபர், களுத்துறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.”

“வீட்டிலிருந்து வெளியே வரும் போது, என்னைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.””எனவே, குறித்த அச்சுறுத்தல் தொடர்பாகச் சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனப் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb58c78e11e
செய்திகள்இலங்கை

மோசமான பராமரிப்பு: இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து திரும்பப் பெறுகிறது!

இலங்கை அரசாங்கத்திற்குக் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து அரசு திருப்பிப் பெறத் திட்டமிட்டுள்ளது....