gold chain jewellery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாடிக்கையாளர் போல் வந்து கைவரிசை: ஹட்டனில் பட்டப்பகலில் தங்கச் சங்கிலி திருட்டு!

Share

ஹட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவர் சுமார் 2.89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் கடைக்குள் நுழைந்து பல தங்கச் சங்கிலிகளைப் பார்வையிட்டுள்ளார். பின்னர் ஒரு சங்கிலியைத் தெரிவு செய்து, அதற்கான பற்றுச்சீட்டை (Bill) எழுதுமாறு கடையில் இருந்த ஊழியர்களிடம் கோரியுள்ளார்.

ஊழியர்கள் பற்றுச்சீட்டைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த நகையை எடுத்துக்கொண்டு நபர் கடையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இச்சம்பவம் நடந்த போது கடையின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்ததாகவும், கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு 2,89,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழுத் திருட்டுச் சம்பவமும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கடை உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...