25 693eb9bc28958
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் ஆபத்து குறையவில்லை: மண்சரிவு பகுதிகளில் வசிப்போருக்கு NBRO கடும் எச்சரிக்கை!

Share

மண்சரிவு அபாயத்தைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கைகள்’ (Red Alerts) சில பகுதிகளில் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து முழுமையாக நீங்கவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது.

மழை குறைந்தாலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து குறித்த பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவது உயிராபத்துக்களைத் தவிர்க்க அவசியமானது என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது 5 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதானமாக இருக்க வேண்டிய பகுதிகள்:

கண்டி மாவட்டம்: உடுதும்பர, மினுபே, மெததும்பர, தொழுவ.
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, ஹகுரான்கெத்த, நில்தண்டாஹின்ன, மதுரட்ட.
பதுளை மாவட்டம்: சொரணதோட்டை, லுணுகல, மீகஹகிவுல.
குருநாகல் மாவட்டம்: ரிதிகம.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங் கோரளை, உகுவெல, யாதவத்த, பல்லேபொல.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் விரிசல்கள், நிலம் உள்வாங்குதல் அல்லது நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...