25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

Share

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல் நீளத்திலான கடற்கரையோரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர இது குறித்து வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்.

முன்னைய வெள்ளக் காலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளே அதிகம் காணப்பட்டன. ஆனால் இம்முறை டன் கணக்கிலான தாவரக் கழிவுகள், ஆடைகள், மரக்கட்டைகள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள் கடலில் கலந்துள்ளன.

குறிப்பாக நக்கிள்ஸ் மற்றும் சிவனொளிபாத மலை போன்ற மத்திய மலைநாட்டின் வனப்பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாரிய அளவிலான தாவரக் கழிவுகள் கடல்சார் சூழல் தொகுதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம், புத்தளம், கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு மற்றும் கிழக்கு மாகாணக் கடற்கரைகள் மிக மோசமாக மாசடைந்துள்ளன.

மாசடைந்துள்ள 143 கிலோமீட்டர் நீளத்திலான கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காகச் சுமார் 5,280 மனித நேரங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

13 பிராந்திய அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்தப் பணிகளை நிறைவு செய்யக் குறைந்தது மூன்று வாரங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இவ்வாறான கழிவுகள் கடலில் கலப்பதைத் தடுக்க, ஆறுகள் கடலுடன் சங்கமிக்கும் இடங்களில் பாதுகாப்பு வலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ள நீர் வடிந்த பின்னரும் ஆறுகள் மற்றும் குளங்களில் கழிவுகளை வீசுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...