24 66c9cc3424de7
செய்திகள்

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு : ஒத்துக்கொண்டார் சிவஞானம்

Share

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு : ஒத்துக்கொண்டார் சிவஞானம்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி பிரிந்து தான் நிற்கும் என வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”பொது வேட்பாளர் என்பது தான் எமது பிரச்சினை அரியநேத்திரன் (Ariyanethran) என்பது இரண்டாவது பிரச்சினை.

ஜனாதிபதி தேர்தல் குறித்து நாங்கள் இன்னமும் முடிவெடுக்கவில்லை. காரணம் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் மூன்று பேரை தான் நாங்கள் கணிக்கலாம். அவர்களுடைய விஞ்ஞாபனம் இன்னமும் வெளியாகவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கில் நிரந்தரமாக மாற்றப்பட முடியாத அல்லது மீளப்பெற முடியாத அதிகாரங்களைக் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை கோருகின்றோம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியுள்ளோம். இவற்றைப் பரசீலிப்பதற்காக நாங்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

கட்சியில் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றது. சிறீதரன் ஆரம்பத்திலேயே தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். அதேநேரம் மூத்த துணைத் தலைவரான நான் ஆதரிக்கவில்லை.

இது சாத்தியமற்றது, வேட்பாளர் தெரிவில் பிரச்சினை வரும், நாங்கள் ஏற்கனவே நிரூபித்த ஆணை அல்லது மக்கள் அங்கீகாரத்தை மலினப்படுத்தும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

பொது வேட்பாளர் விடயத்தில் தனிமுடிவுக்கு வர மாட்டோம். கட்சி இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. அவ்வாறு முடிவு எடுத்தாலும் நான் என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டேன்.“ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...