1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

Share

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இலங்கையின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி அடையாளப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரிய தலைமையில் நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாதவாறு சுமார் 3,500 சட்டத்தரணிகள் இதில் பங்கேற்றனர். இடவசதி பற்றாக்குறை காரணமாகப் பெருமளவிலானோர் Zoom தொழில்நுட்பம் ஊடாக இணைந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (16) ஒரு நாள் அடையாளமாக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருத்தல்.

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரத்தை ஒழித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்தல்.

குற்றவாளிகள் அனைவரையும் தாமதமின்றி கைது செய்ய காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தல்.

தவறான தகவல்களுக்கு கண்டனம்: வழக்குத் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கசியவிடும் காவல்துறை மற்றும் பிற தரப்பினர் மீது அதிருப்தி வெளியிடுதல்.

நீதியை நிலைநாட்டும் ஒரு சட்டத்தரணிக்கே நாட்டின் தலைநகருக்கு அருகில் இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றால், சாதாரண குடிமகனின் நிலை என்ன? என்ற கேள்வியைச் சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பியுள்ளது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த சட்டத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்கத் தவறினால் போராட்டங்கள் தீவிரமடையும் என எச்சரித்தார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...