9 18
செய்திகள்

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

Share

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஷான் ரணசூரிய என்பவர் சட்டத்தரணி ஜயமுதிதா ஜயசூரிய ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் உயர் நீதிமன்றின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படவில்லை எனவும், அதனால் அவர் இலங்கை அரசியல் அமைப்பை மீறி உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே அவர் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதியாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவும் சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தின் 35 (3) பிரிவிற்கு அமைய ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று ஜனாதிபதியினால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி உயர் உயர்நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக்கு அமைய சிரேஸ்ட பிரதி பொலிஸ் அதிபர்களில் ஒருவரை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றிடம் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு அமைய மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக உரிய அதிகாரியை நியமிக்காமல் செயல்பட்டமை ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் காரணமாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என குறிப்பிடும் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சராக அலி சப்ரியை நியமித்து உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...