9 18
செய்திகள்

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

Share

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஷான் ரணசூரிய என்பவர் சட்டத்தரணி ஜயமுதிதா ஜயசூரிய ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் உயர் நீதிமன்றின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படவில்லை எனவும், அதனால் அவர் இலங்கை அரசியல் அமைப்பை மீறி உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே அவர் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதியாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவும் சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தின் 35 (3) பிரிவிற்கு அமைய ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று ஜனாதிபதியினால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி உயர் உயர்நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக்கு அமைய சிரேஸ்ட பிரதி பொலிஸ் அதிபர்களில் ஒருவரை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றிடம் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு அமைய மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக உரிய அதிகாரியை நியமிக்காமல் செயல்பட்டமை ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் காரணமாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என குறிப்பிடும் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சராக அலி சப்ரியை நியமித்து உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...