images 13 1
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சர்ச்சை: குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய அமைச்சர் சந்திரசேகரன்!

Share

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பொதுவாகத் தேசியக் கொடி ஏற்றப்படும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்கும் வகையில் நேராக நின்று வணக்கமுறை பின்பற்றுவது வழக்கம். ஆனால், மழை காரணமாக அமைச்சர் ஒரு கையால் குடையைப் பிடித்தவாறு மறு கையால் கொடியை ஏற்றியுள்ளார்.

நாட்டின் கௌரவமாகக் கருதப்படும் தேசியக் கொடியை ஏற்றும் போது அமைச்சர்கள் போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் எனவும், இந்தச் செயல் தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இது குறித்துப் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...