1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

Share

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாகப் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே இந்தப் பல்கலைக்கழக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (அக்டோபர் 19) இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் புள்ளிகள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஆரம்பத்தில் மோதல் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இன்றும் (அக்டோபர் 20) இந்தச் சம்பவம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் சுமார் 06 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களைக் கம்புருபிட்டிய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 2
உலகம்செய்திகள்

ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்வு: அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை!

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகெரு இஷிபா...

MediaFile 3
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது! களு, களனி கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய முன் எச்சரிக்கை...

image 3166dced36
செய்திகள்இலங்கை

அரச இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பின.

‘இலங்கை அரச கிளவுட்’ (Sri Lanka Government Cloud) சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது...

skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...