1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

Share

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வீதி கனமழை மற்றும் மண்சரிவு காரணமாகக் கனேதென்ன (Ganetenna) பகுதியில் மூடப்பட்டிருந்தது.

பின்னர், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி ஒரு வழிப் பாதையாகத் தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருந்தது.

தற்போது நிலவும் வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு முதல் மீண்டும் அந்த வீதி முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், மறு அறிவிப்பு வரும் வரை வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...