எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான 100 % எண்ணெயை உற்பத்தி செய்வதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை தங்களுடைய சேமிப்புக் கிடங்குகளில் மறைத்து வைத்திருக்கின்றன.
#SrilankaNews
Leave a comment