MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்:

டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அவரிடம் இருந்த துப்பாக்கிகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவே விசாரணைகளை நடத்துகின்றது.

கடந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவருக்கு 13 ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கிகள் மற்றும் 6 பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான சட்டப்பூர்வத் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) கடந்த காலங்களில் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோருதல் மற்றும் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் என்றும், அதனை நீதித்துறை உறுதிப்படுத்தும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...