24 6705d4ceb2b32
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் ஆயுதங்களை தேடி அகழ்வு முயற்சி: 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் (நவ4) அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாகக் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கனரக இயந்திரம் கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மேல் தோண்டப்பட்டது. தீவிரத் தேடலுக்குப் பின்னரும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியினைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைவிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...