images 3 8
செய்திகள்உலகம்

AI சாட்போட்களுக்குத் தடைக்கயிறு: தற்கொலைத் தூண்டுதல்களைத் தடுக்க சீனா புதிய சட்டங்களை வரைந்தது!

Share

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்கள் மூலம் பயனாளர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதைத் தடுக்கவும், உணர்வு ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும் சீனா கடுமையான புதிய சட்ட விதிகளை முன்மொழிந்துள்ளது.

சீனாவின் இந்த புதிய வரைவுச் சட்டத்தில், சாட்போட்களுடனான உரையாடலில் ‘தற்கொலை’ (Suicide) என்ற சொல் பயன்படுத்தப்பட்டால், உடனடியாக ஒரு மனித அதிகாரி அந்த உரையாடலில் தலையிட்டு வழிகாட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் பதிவு செய்த பயனாளர்கள் அல்லது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாதாந்த பயனாளர்களைக் கொண்ட AI நிறுவனங்கள், ஆண்டுதோறும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தணிக்கைகளுக்கு (Audits) உட்பட வேண்டும்.

பயனாளர்களின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை AI நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தீவிர உணர்ச்சி மாற்றங்கள் அல்லது சாட்போட்களுக்கு அடிமையாகும் தன்மையைக் கண்டால் நிறுவனங்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பதிவு செய்யும் போது தங்களது பாதுகாவலரின் விபரங்களை வழங்க வேண்டும். சுய-தீங்கு தொடர்பான உரையாடல்கள் நிகழும் போது பாதுகாவலருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

அமெரிக்காவில் ChatGPT உடன் உரையாடிய நபர் ஒருவர், சாட்போட் வழங்கிய தவறான தகவலால் தனது தாயைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்தே இத்தகைய கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில், OpenAI நிறுவனம் இவ்வாறான ஆபத்துகளைக் கையாள ‘தயார்நிலைத் தலைவர்’ (Head of Preparedness) என்ற புதிய உயர் பதவியை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...