செய்திகள்உலகம்

குழந்தைகள் வைத்தியசாலையில் குண்டுவீச்சு – தாண்டவமாடிய ரஸ்யா!!

Share

உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

இதில் 17 பேர் காயமடைந்ததுடன் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது.

தமக்கு தொடர்பில்லாத போருக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வருகின்றனர். இந்த அர்த்தமற்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...